பக்கங்கள்

25 மே 2010

விஜயகாந்தினது மகன் பிரபாகரன் மக்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்!


விஜயகாந்த் மகன் பிரபாகரன் காரில் கூடுவாஞ்சேரி வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது காரை ஓட்டிய டிரைவரின் கவனக்குறைவால் நான்கு பேருக்கு அடிபட்டது.தாம்பரத்தில் உள்ள ஒரு வணிக வளாக ஊழியர்கள் 10 பேர் நேற்று வேலை முடிந்து வேனில் கூடுவாஞ்சேரி நோக்கி சென்றனர்.வண்டலூர் பூங்கா அடுத்த ஊரப்பாக்கம் ரோட்டில் வேன் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வெள்ளை நிற கார் ஒன்று தொடர்ந்து வந்தது. வேனை முந்து வதற்கு கார்போட்டி போட்டது. திடீரென வேனின் ஓரத்தில் கார் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த மோகன், கிருஷ்ணகுமார், பிரியா, கோகிலா ஆகியோர் காயம் அடைந்தனர். இதனால் கொதித்தெழுந்த வேன் டிரைவர் உடனே கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர்களுக்கு போன் செய்தார்.
நான் வந்த வேன் மீது ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் நம்ம ஏரியாவுக்கு வருது. அதனை மடக்கி பிடிங்க என்று கூறினார். அவரது நண்பர்களும் அப்பகுதி பொதுமக்களை அழைத்து கொண்டு ரோட்டில் தடுப்பாக நின்றனர். காரை துரத்தி வேனும் பின்னால் சென்றது. கார் கூடுவாஞ்சேரி வந்தவுடன் அதனை மடக்கி சுற்றி வளைத்தனர். ஆத்திரத்தில் இருந்த மக்கள் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். டிரைவரை வெளியே இழுத்து வந்து உதைத்தனர். இதில் அவர் காயம் அடைந்தார். உடனே பின் சீட்டில் அமர்ந்திருந்த 20வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறங்கி வந்தார். நான் நடிகர் விஜயகாந்த் மகன். எனது பெயர் பிரபாகரன். தெரியாமல் நடந்து விட்டது என்று கூறினார். ஆனால் யாரும் நம்ப வில்லை. பிரபாகரன் அந்த பகுதி கட்சி செயலாளர் கரீம் என்பவருக்கு போன் செய்து வரவழைத்தார். அவர் வந்து சொன்ன பிறகே அவர் விஜயகாந்த் மகன் என தெரிந்தது. பின்னர் இருதரப்பினரும் சமாதானம் பேசி கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.