பக்கங்கள்

29 மே 2010

சர்வதேச மன்னிப்பு சபை பயங்கரவாத அமைப்பென்கிறார் சிறிலங்காவின் அமைச்சர்!



உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க கேட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவிவரும் மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்துவதன் மூலமே உலகப் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச் சபையின் அறிக்கைகளையும் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட தலைமையினாலேயே நாடு விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இயங்கும் வேறும் சில தன்னார்வ நிறுவனங்களும் பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட முனைவதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட ரணவக்க நாட்டு மக்களும் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.