பக்கங்கள்

22 மே 2010

மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள கோரமான புகைப்படங்கள் போலி என்கிறது சிங்களம்!




மனித உரிமை கண்காணிப்பகம் உலகம் முழுவதிலும் விநியோகம் செய்துள்ள போர்க்குற்றக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என திவயின என்னும் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் படையினர் தமிழ் இளைஞர்களை தென்னைமரத்துடன் கட்டிவைத்து கத்தியால் குத்தி கோரப்படுகொலைகளை மேற்கொள்வதாக சித்தரிக்கக் கூடிய 200 புகைப்படங்களை மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது.
எனினும், போர்க் குற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆதாரங்களை தொடர்ந்து நிராகரித்து வரும் இலங்கை அரசு, ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களையும் வழமைபோல நிராகரித்துள்ளது.
இந்த புகைப்படங்கள் போலியானவை என இலங்கை அரசாங்கம் கண்டு பிடித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்தப் புகைப்படங்களை வழங்கிய தரப்பினரை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையின் வான் படையினரே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக இந்தப் புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. என திவயின என்னும் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.