பக்கங்கள்

19 மே 2010

நாச்சிக்குடா பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு!


மன்னார் – கிளிநொச்சி மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் நாச்சிக்குடாப் பகுதியில் மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் ஒரு தொகுதி மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து இதுவரை எழுபத்தைந்து தொடக்கம் எண்பது வரையான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட பொழுது இவை கண்டெடுக்கப்பட்டதாக டானிஷ் கண்ணிவெடியகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வன்னிப் போரில் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – யுவதிகளின் மனித எச்சங்களாக இவை இருக்கக்கூடும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.