பக்கங்கள்

01 ஆகஸ்ட் 2013

தேர்தலைத் தடுக்க அரசு முயற்சி-விக்னேஸ்வரன்

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு விருப்பமில்லை. இதனால் இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமாகாண முதன்மை வேட்பாளர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்குஅவர் மேலும் தெரிவித்ததாவது: அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதையே விரும்புகின்றது. இங்கு ஆளுநரும், ஒரு சில அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளைச் சட்ட ரீதியாகக் கடமைகளைச் செய்யவிடாது தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்குதல் காரணமாகவே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். ஜனநாயக ரீதியில் கூட தடுக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.