பக்கங்கள்

05 ஆகஸ்ட் 2013

தமிழனை சுடும்போது சிரித்தவர்கள் இப்போ அழுகிறார்கள்!

newsஎனது மகனை வீட்டுக்கு அருகில் சிறிலங்கா படையினர் துரத்திப் பிடித்தே சுட்டுக்கொன்றனர்.அவன் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இன்று தொடங்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அவன் தோற்றவிருந்தான். இவ்வாறு தெரிவித்துள்ளார் நேற்றுமுன்தினம் இரவு மரணமான சாமிலி ரவிசனின் தாயாரான மார்க்ரெட் லூசியன். இதுகுறித்து அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், “எனது மகன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. அவன் எமது வீட்டுக்கு அருகில் வைத்து சுடப்பட்டான். இது போராட்டம் நடந்த இடத்துக்கு அருகில் நடந்த கொலையல்ல. அவர்கள் எமது வீட்டுக்கு அருகே துரத்திப் பிடித்துச் சுட்டனர்.” என்றார். அதேவேளை, தனது பெயரை வெளியிட விரும்பாத, ஒருவர் இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிடுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்டபடி சுட்டனர். பொதுமக்கள் தமது உயிர்களை காப்பாற்ற ஓடத்தொடங்கினர். நாம் ஹெலன்வத்தையை நோக்கி ஓடினோம். எம்மை கறுப்பு சீருடையணிந்த ஏழு எட்டுப் பேர் துரத்திப் பிடித்தனர். அருகில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு ஒளிப்பதிவுக்கருவியை அடித்து நொருக்கி விட்டு அவர்கள் பொதுமக்களை சுடத் தொடங்கினர். அந்தச் சம்பவத்தில் இருவர் சுடப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.