ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கைத் தலைமைக் காரியாலயத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இந்தக் காரியாலயத்திற்கு எதிரில் ரவனா பலய அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.
நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்திருக்கக் கூடாது என ரவனா பலய வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும், நவனீதம்பிள்ளைக்கும் எதிராக பதாகைகள் காண்பித்தும் கோஷங்களை எழுப்பியும் ரவான பலாய அமைப்பின் பௌத்த பிக்களும் ஏனைய உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக பௌத்தலாகோ மாவத்தையின் போக்கவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.