பக்கங்கள்

31 ஜூலை 2013

புங்குடுதீவில் உருக்குலைந்த நிலையில் சடலம்!

யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவுக்கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உருக்குலைந்த நிலையில் புங்குடுதீவு 10ம் வட்டார கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்த சடலத்தை கடற்படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்த சடலம் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொக்குவில் பிடாரி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தேவாராசா தினேஸ் என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.கடந்த 4 ஆம் மாதம் 10ஆம் திகதியில் இருந்து இவர் காணமல் போயுள்ளதாக அவரின் சகோதரனால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.