பக்கங்கள்

25 ஆகஸ்ட் 2013

சில சண்டியர்கள் எதிரிகளை கண்டால் மறைந்துகொள்வர்!

ஐநா மீது ஜேவிபி பாய்ச்சல்: சண்டியர்கள் எதிரிகளை கண்டதும் ஒழிந்து கொள்வராம்ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு பக்கச்சார்பான நிறுவனம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பத்தரமுள்ளை, பெலவத்த கட்சி அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் கட்சி அலுவலகத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், "நவனீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையின் காரணமாக இன்று இலங்கையில் ஒரு விவாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனோடு இணைந்த அனைத்து உலக அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கொள்ளையை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாக செயற்படுகிறது. இதனையே நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் ஐநா சபை செய்யும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. தங்களுடைய அதிகாரத்தை பெற்றுக் கொண்டு அதற்காக மனித உரிமை, ஜனநாயகம் போன்றவற்றிற்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தல் என்பன நடைபெறுகின்றன. கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு, ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீது கத்தி வெட்டு நடத்தப்பட்டு, பல அச்சுறுத்தல் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் அதனுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டவோ தண்டிக்கப்படவோ இல்லை. அதற்கான காரணம் அரசாங்கத்தின் பின்புல ஆலோசனையிலேயே இவைகள் இடம்பெறுதல் ஆகும். அரசியல்வாதிகளுக்கு அழுத்தம், எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. வடக்கிற்கு சென்று அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் செய்த லலித், குகன் கடத்தப்பட்டனர். இரண்டு வருடங்களாகியும் இதுவரை தகவல்கள் இல்லை. அசாத்சாலி கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியிலும் அரசாங்கத்தின் அரசியல் தேவை உள்ளது. அதுமட்டுமல்லாது ஜனநாயக ரீதியில் நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கூட இடமில்லை. இராணுவத்தினர், பொலிஸார் தாக்குகின்றனர். துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். இந்த அரசாங்கம் மனித உரிமை, ஜனநாயகம் என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு பதிலாக ஏகாதிபத்திய ஆட்சியை நடத்துகிறது. தன்னை ஏகாதிபதி என சொல்வது ஏன் என மஹீந்த ராஜபக்ஷ கேட்கிறார். நல்ல குழந்தை போல அவர் பேசுகிறார். ஊடகங்களுக்கு தீ வைப்பதென்றால் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால், மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்றால், சிவில் செயற்பட்டாளர்கள் கடத்தப்படுகிறார்கள் என்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்றால், கனவு அமைச்சரவை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் ஊடகவியலாளர்கள் எழுத முடியாதளவிற்கு பயப்பட்டுள்ளனர் என்றால் இங்கு நடப்பது ஏகாதிபத்திய ஆட்சி தான். ஊடகவியலாளர் மந்தனா ஸ்மைல் வீட்டின் மீது இடம்பெற்றது கொள்ளைச் சம்பவமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரும் கொள்ளைச்சம்பவம் இடம்பெறும் போதும் அங்கு நடைபெற்ற விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை ஆகும். நவனீதம்பிள்ளை இலங்கை வரும்போது மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளார். இதன்மூலம் அரசாங்கம் பயாஸ்கோப் காட்டுகிறது. சில சண்டியர்கள் எதிரிகள் வரும்பொது மறைந்திருப்பர். பின்னர் முகங் காட்டுவர். இது ராஜதந்திர நடவடிக்கை அல்ல. மெதமுலன நபரின் வைராக்கியத்தை போன்ற பயாஸ்கோப். அதனை மக்கள் விளங்கிக் கொள்வர். நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என நாங்கள் நினைக்கிறோம். அரசாங்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எடுத்த சில நடவடிக்கைகள் மூலம் அது நடந்துள்ளது. நவனீதம்பிள்ளை இலங்கைக்கு வந்து அனைத்து தகவல்களையும் திரட்டிச் செல்வார் என நினைத்தால் அது தவறு. இலங்கை வர முன்பே அவரிடம் பல தகவல்கள் உள்ளன. தகவல் பெற்றுக் கொள்ளும் வலையமப்பு அவரிடம் உள்ளது. அங்கிருந்து மட்டுமல்ல இங்கு வந்தும் தகவல் சேகரிப்போம் என்பதை காட்டுவதற்கே அவர் இங்கு வந்துள்ளார். ரத்துபஸ்வல சம்பவம் ஊடகவியலாளர் தாக்கப்படுவது வடக்கு நிலமை என அனைத்து தகவல்களையும் ஒரு வாரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. இலங்கை நிறுவனங்களிடம் உள்ள தகவல்களை விடவும் அதிகமான தகவல்களை அவர் வைத்திருக்கிறார். என அநுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.