பக்கங்கள்

16 ஆகஸ்ட் 2013

வருகிறார் நவநீதம்பிள்ளை!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று செல்லும் நவநீதம் பிள்ளை ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை இலங்கை நீதித்துறை சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன்,மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை நீதித்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள், மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான தேசிய செயற்றிட்டக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரையும் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார். இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவையும் நவநீதம்பிள்ளை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.