பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2013

பகிரங்கமாகிறது இராணுவ அறிக்கை!

வெலிவேரிய, ரதுபஸ்வலவில் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக விசாரித்த, இராணுவ நீதிமன்றத்தின் முடிவுகள், வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான இராணுவ நீதிமன்றம், வெலிவேரிய சம்பவம் தொடர்பான அறிக்கையை, கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கையளித்திருந்தது. இராணுவ நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்ட முடிவுகள், இராணுவப் பேச்சாளர் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை, இராணுவ சட்டப்பிரிவிடம், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க கையளித்துள்ளார். இராணுவ சட்டப்பிரிவு, மேல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்தவாரம் அவருக்குப் பதிலளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.