பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2013

யாழில் புலம்பெயர்ந்த பெண்களால் கலாச்சார சீரழிவாம்!

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருப்போர் கோடை கால விடுமுறையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கிற்கு சென்று வருகின்றனர். அங்கு செல்பவர்கள் அரைகுறை ஆடைகளுடன் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் வர வேண்டாம் என அங்குள்ள உள்ளுர் மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள் என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வெளிநாடுகளிலிருந்து இங்கு வரும் பல பெண்கள் உள்ளாடையான யங்கியுடனும், மார்பகத்தை மறைக்கும் மார்பு கச்சையுடனும் வருகிறார்கள். சில பெண்கள் மார்பு கச்சை கூட அரைகுறையாக அணிந்து வருகிறார்கள். இதனால் பண்பாட்டு சீரழிவுகள் பல நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார். அண்மையில் சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பெற்றோர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். 20 வயது மதிக்க தக்க மகளுடன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெயர்பலகைக்கு முன்னால் நின்று படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டிருந்தார்கள். அந்த பெற்றோரின் மகள் மிக மோசமான மிக மிக சிறிய யங்கியுடன் சிறிய மார்பு கச்சையுடன் படம் எடுத்து போட்டிருந்தார்.இது பெரும்பாலானவர்களை முகம் சுழிக்க வைத்தது. இதேவேளை இப்படி அரைகுறை ஆடையுடன் யாழ்ப்பாணம் வருபவர்களிடம் ஒழுங்கான ஆடைகளை அணியுங்கள் என கேட்டால் நாங்கள் இந்த ஆடைகளை அணிவதை யார் கேட்க முடியும் என புலம்பெயர்ந்ததுகள் கேட்குதுகள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது. பெருந்தொகையான புலம்பெயர்ந்ததுகள் நல்லூர் வீதிகளில் அலைந்து திரியுதுகள் என்றும் அவர் தெரிவித்தார். நல்லூர் கோவிலுக்கு வருபவர்கள் ஆலயத்திற்கு வருபவர்களை போல ஒழுங்கான உடைகளை அணிந்து வருமாறு ஆலய நிர்வாகம் அறிவித்த போதிலும் புலம்பெயர்ந்ததுகள் அரைகுறை ஆடையுடன் தான் திரிகின்றன என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.இப்படி ஒரு இணையம் செய்தி வெளியிட்டு புலம்பெயர் தமிழரின் மானத்தை வாங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.