பக்கங்கள்

22 ஆகஸ்ட் 2013

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயத்தில் கொள்ளையர் கைவரிசை!

ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதி சிறீ மகாமாரி அம்பாள் ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.ஆலயத்தின் முற்பகுதியில் சிறிய அம்பாள் அமைவிடம் ஒன்றை அமைப்பதற்காக முன்பக்க சுவர் உடைக்கப்பட்டிருந்ததாகவும் இதனை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர் அதனூடாக ஆலயத்தினுள் நுழைந்து மூலஸ்தானத்தில் இருந்த அம்பாள் விக்கிரகத்தை  நகர்த்தி விட்டு இயந்திரத்தகட்டை கொள்ளையிட்டதுடன் பின்னர் பற்றுச்சீட்டு வழங்கும் பகுதியையும் உடைத்து அங்கிருந்த நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றையும் வெள்ளி பாத்திரங்களையும் கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தால் அம்பாள் பக்தர்கள் மிகுந்த விசனமடைந்து காணப்படுகின்றனர்.
 இந்த கொள்ளை  சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.