பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2013

ஜெயரட்ணத்திற்கு பதவி உயர்வு வேண்டுகிறார் அவரது மனைவி!

விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள, சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத முறியடிப்புப் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்துக்கு, மரணத்தின் பின்னரான பதவிஉயர்வை சிறிலங்கா காவல்துறை அளிக்கத் தவறிவிட்டதாக அவரது மனைவி சரளா ஜெயரட்ணம் விசனம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறையில், விடுதலைப் புலிகளுக்கு மிகவும் சவாலாக விளங்கிய, இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், புலனாய்வு செய்வதில் நிபுணராக இருந்தவர். இவர் கல்கிசைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து 2005 ஏப்ரல் 20ம் நாள் கடத்தப்பட்டு, வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டு, கொல்லப்பட்டதாக கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தநிலையில், தமது கணவருக்கு மரணத்துக்குப் பிந்திய பதவி உயர்வை சிறிலங்கா காவல்துறை கொடுக்கத் தவறிவிட்டதாக அவரது மனைவி சரளா ஜெயரட்ணம் குற்றம்சாட்டியுள்ளார். அவருக்கு மரணத்துக்குப் பிந்திய பதவிஉயர்வு மற்றும் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தாம் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.