பக்கங்கள்

28 ஆகஸ்ட் 2013

அபிவிருத்தியை மதிப்பிட நான் வரவில்லை-நவ­நீ­தம்­பிள்ளை

வட­ மா­காண பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கட்­டு­மா­னப்­ப­ணிகள் மகிழ்ச்சி அளித்­தாலும் அதனை மதிப்­பீடு செய்­வ­தற்­காக நான் இலங்கை வர­வில்லை. உள்­நாட்டில் மனித உரி­மை­களின் தற்போ­தைய நிலை­வ­ரத்தை மதிப்­பீடு செய்­வதே இலங்­கைக்­கான எனது பயணத்தின் நோக்­கமும் கட­மையும் ஆகும் என்று ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.நூல­கத்­திற்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை (27.08.13) காலை சென்ற ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை நூல­கத்தை பார்­வை­யிட்­ட­துடன் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்­தி­ரசிறி மற்றும் பிரதி செய­லாளர் விஜ­ய­லட்­சுமி ரமேஷ் ஆகி­யோரின் தலை­மையில் வட மாகா­ணத்தின் அனைத்து மாவட்ட செய­லா­ளர்கள் வடக்கில் மேற்­ கொள்­ளப்­பட்­டுள்ள அபி­வி­ருத்தி பணிகள் தொடர்பில் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு விளக்­க­ம­ளித்­தார்கள். இதன் போது உரை­யாற்­று­கை­யி­லேயே மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் அங்கு உரை­ஆற்­றிய அவர் இலங்­கையின் வட­ப­கு­தி­களில் பல்­வேறு அபி­வி­ருத்தி பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு உள்­ள­மையை உங்­களின் விளக்­க­ம­ளிப்­பு­க­ளூ­டாக அறிந்து கொள்­கின்றேன். குறிப்­பாக ஐ.நா. இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற மக்கள் மேம்­பாட்டுத் திட்­டங்­க­ளையும் ஐ. நா. கொள்­கை­க­ளையும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. மீள் குடி­யேற்றம் மற்றும் அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களும் மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. எனினும் “இலங்­கைக்­கான எனது பயணத்தின் நோக்கம் வடக்கின் அபி­வி­ருத்­தி­களை மதிப்­பீடு செய்­வ­தில்லை. இலங்­கையின் மனித உரி­மைகள் நிலைவரத்தை முழுமையாக மதிப்பீடு செய்வதும் குறிப்பிட்ட சில தரப்புக்களையும் பொது மக்களையும் சந்தித்து உண்மை நிலைவரத்தை கண்டறிய வேண்டியதும் எனது கடமையாகும்” எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.