பக்கங்கள்

03 ஆகஸ்ட் 2013

சம்பந்தன் பிரசாரத்திற்கு வர வேண்டாம்!

வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு சம்பந்தனை அழைக்க வேண்டாம் என யாழ். தமிழரசுக்கட்சியினர் மாவை சேனாதிராசாவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பந்தன் மீது யாழ். மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரசார மேடைகளில் ஏறினால் பெரும்பாலான யாழ். மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். இதனால் அவரை யாழ்ப்பாணம் அழைத்து வர வேண்டாம் என யாழ். தமிழரசுக்கட்சியினர் மாவை சேனாதிராசாவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்கு வரும் போது சிங்கள பேரினவாத கொடியான சிங்க கொடியையும் கொண்டு வந்து விடுவார் என்றும் தமிழரசுக்கட்சியில் உள்ள ஒரு சாரார் அச்சம் தெரிவித்துள்ளனர். அண்மையில் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த மகிந்த ராசபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை இரகசியமாக சந்தித்து வருகிறார் என்றும் அவர் அரசுக்கு ஆதரவு வழங்கி வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார். மகிந்த ராசபக்சவை அடிக்கடி சந்தித்து வருபவர் வேறு யாருமல்ல சம்பந்தனே என்றும் அவர் மகிந்தவை சந்தித்து இரகசிய திட்டங்களை தீட்டி வருகிறார் என்றும் யாழ். தமிழரசுக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.