பக்கங்கள்

21 ஆகஸ்ட் 2013

புலிகள் இயக்கத்தை சேர்ந்த தம்பதிகள் கைதாம்!

இந்திய மீனவர்கள் போல், இலங்கையின் வடக்கு கடற்பரப்பிற்குள் சென்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான கணவன், மனைவி மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகளை கடற்படையினர் நேற்று கைதுசெய்து, அவர்களை தலைமன்னார் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இவர்களிடம் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய இந்த கணவனும் மனைவியும் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து, அங்கு அகதி முகாம் ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு இந்தியாவுக்கு சென்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலர் மீனவர்களை போல் மீண்டும் இலங்கைக்குள் வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது. இந்தியாவில் அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் புலிகளின் உறுப்பினர்கள் பலர், மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி இவ்வாறு இலங்கைக்குள் வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.