பக்கங்கள்

28 பிப்ரவரி 2012

ஐரோப்பிய மக்களையும் ஒன்றிணைத்து போராடுங்கள்.

உங்கள் நாட்டின் விடுதலைக்காக உங்கள் இனத்தின் விடுதலைக்காக இந்த நாடுகளில் தனித்து நின்று போராடுவதால் எதையும் சாதித்து விடமுடியாது. இந்த நாட்டை சேர்ந்த மக்களையும் இணைத்துக்கொண்டு போராடுங்கள், அவர்களின் ஆதரவை பெறுவதன் மூலம் உங்கள் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் இந்த நாடுகள் ஏற்கவேண்டிய நிலைக்கு வருவார்கள் என சுவிட்சர்லாந்து நாட்டைச்சேர்ந்த சமூகவியலாளர் அனா அன்னா அனோஜ் இன்று மாலை ஜெனிவா அரங்கில் நடைபெற்ற நீதிக்காய் ஒன்றுபடுவோம் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த இந்த நீதிக்காய் ஒன்றுபடுவோம் பேரணியில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்தும் பெருந்தொகையானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா மீதான போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசியல் தலைவர்கள் மற்றும் சிறிலங்கா படை அதிகாரிகளை விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தி ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
சமூகவியலாளர் அனா அன்னா அனோஸ் தொடர்ந்து உரையாற்றுகையில் இனப்படுகொலையிலிருந்து நீங்கள் தப்பி ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் இனத்துவ கொலைகளை உங்களால் தடுக்க முடியாது போய்விடுகிறது. உங்கள் இனத்துவத்தை காப்பாற்றும் மொழியை உங்களது அடுத்த சந்ததிகள் இழந்து வருகிறார்கள். இன்னும் இரண்டு மூன்று தலைமுறையின் பின்னர் உங்கள் நிறத்தை வைத்துக்கொண்டுதான் நீங்கள் தமிழர்கள் என்று அடையாளம் காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்கள் மொழியையும் கலாசாரத்தையும் நீங்கள் இழந்தால் உங்கள் இனத்துவத்தை இழந்தவர்களாவீர்கள். நீங்கள் வாழும் நாடுகளில் அந்தந்த மொழிகளை கற்கும் அதேவேளை உங்கள் தாய் மொழியையும் கலாசாரத்தையும் அடுத்த சந்ததிக்கும் எடுத்து செல்லுங்கள். இல்லையேல் உங்கள் தாயகத்தில் இருக்கிற உறவினர்களுடன் அந்நியப்படும் நிலை ஏற்பட்டு விடும்.
நீங்கள் இங்கே தனித்து போராட்டம் நடத்துவதை விட இந்த நாட்டு மக்களையும் அழைத்து வந்து போராட்டம் நடத்தினால் அதனால் கிடைக்கும் வெற்றி அதிகமாக இருக்கும் என அனோ அன்னா தெரிவித்தார். இந்த பேரணியில் லண்டனிலிருந்து நடைப்பயணமாக வந்த ஜெயசங்கரும் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.