பக்கங்கள்

21 பிப்ரவரி 2012

இன்றைய பாராளுமன்ற அமர்விலும் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு!

எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக எதிர்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை - எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றில் இன்று பாதாகைகளை காண்பித்து எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று கூடும் மத்திய மாகாண சபை அமர்விலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திட்டங்களை செயற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.