பக்கங்கள்

11 பிப்ரவரி 2012

கோபப்படும் சவேந்திர சில்வா.

இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்தின் செய்தியாளர் மத்யூ ரசல் லீயிடம், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்ன தெரிவித்துள்ளார். எப்போதும் ஜெனரல் சவீந்திர சில்வாவை போர்க்குற்றவாளி என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதாலேயே அவர் கோபத்தில் இருப்பதாகவும் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் உள்ள மிலேனியம் விடுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இரவு விருந்திலேயே இன்னர்சிற்றி பிரசின் செய்தியாளரிடம் பாலித கோகன்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஈரான் தேசியநாளை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இந்த இரவு விருந்தில் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டிருந்தார்.
அவருடன் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ உரையாடிய போது - நீங்கள் எப்போதும் எனக்கு எதிராகவே எழுதுகிறீர்கள் - என்று கடிந்து கடும் கோபத்தில் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனக்கு எதிராக தனிப்படக் போர்க்குற்றம் சாட்டப்படவில்லை என்றும் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.