பக்கங்கள்

06 பிப்ரவரி 2012

சிங்கள சுதந்திர நாளில் பாரிசில் உள்ள தூதரகத்தில் சிங்கக்கொடி பறக்கவில்லையாம்!

சிறிலங்காவின் 64 வது சுதந்திர நாளன்று பாரிசில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் சிறிலங்காவின் சுதந்திர நாளை முன்னிட்டு சிறிலங்காவிலும், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களிலும் சிறிலங்காவின தேசியக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஆனால் பாரிசில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் சிறிலங்காவின் தேசியக்கொடி பறக்கவில்லை.
மாறாக சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிரான போராட்டம் ஒன்றே நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்கள், சிறிலங்காவில் தமிழர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியிருத்துடன் முழக்கங்களையும் எழுப்பினர்.
பாரிசில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் சுதந்திர நாளில் சிறிலங்காவின் தேசியக்கொடி பறக்க விடப்படாததற்கு பௌத்த பிக்குகளும் சிங்கள அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா தூதரக அதிகாரி ஒருவர், வேலை நாட்களில், செயலக பணிநேரத்தின் போது மட்டும் தான் சிறிலங்காவின் தேசியக்கொடி பறக்க விடப்படும் என்றும், பணிநேரம் முடிந்த்தும் அது இறக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.