பக்கங்கள்

08 பிப்ரவரி 2012

மாடியிலிருந்து விழுந்த ரம்புக்வெலவுக்கு சத்திரசிகிச்சை!

அவுஸ்ரேலியாவில் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தகவலை அவரது ஊடகச்செயலர் சரத் தம்பவின்ன நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.
மெல்பேர்னில் உள்ள விடுதியின் மூன்றாவது மாடியின் ‘பல்கனி‘யில் இருந்து நேற்று முன்தினம் தவறி விழுந்த சிறிலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவின் இரு கால்களும் முறிந்து போனதுடன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
மாடியில் இருந்து தவறி வீழ்ந்தபோது கெகலிய ரம்புக்வெல மதுபோதையில் இருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு ஏற்கனவே இரண்டு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையிலேயே நாளை மீண்டும் மற்றொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தநிலையில் ரம்புக்வெலவின் மனைவி நேற்று அவசரமாக அவுஸ்ரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
றோயல் கல்லூரி துடுப்பாட்ட அணித் தலைவரான மகன் ரமித் முழங்காலில் காயமடைந்ததை அடுத்தே அவரைப் பார்க்க ரம்புக்வெல அவுஸ்ரேலியா சென்றிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.