பக்கங்கள்

07 பிப்ரவரி 2012

டோகோவில் இருந்து 28 பேர் நாடு திரும்பினர்!

டோகோ முகாமில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 28 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக எமது கட்டுநாயக்க வானுர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்..
இதில், 3 பெண்களும் 25 ஆண்களும் அடங்குவதாக அவர் கூறினார்..
இவர்களில் இரண்டு தமிழர்களும் ஒரு இஸ்லாமியரும் அடங்குகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியினில் 200 பேர் இலங்கையில் இருந்து கனடா நோக்கி பயணித்தனர்.
இதன்போது அவர்கள் டோகோவில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் 28 பேரே இவ்வாறு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.