பக்கங்கள்

04 மார்ச் 2012

மக்களுக்கும் ஈபிடிபிக்கும் இடையில் முறுகல்!

நெடுந்தீவில் 12வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர் என அடையாளம் காணப்பட்டு மக்களால் அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டிருக்கின்றார்.நேற்று முன்தினம் குறித்த மாணவி சந்தைக்குச் சென்றவேளை காணாமல் போய் பின்னர் மறு நாள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் ஈபிடிபியின் முக்கியஸ்தரான கிருபா என மக்களால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
இதனை அடுத்து மக்கள் குறித்த நபரை மடக்கிப்பிடித்த நிலையில் பொலிஸார் சென்று அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதேவேளை குறித்த சம்பத்தினை அடுத்து மக்கள் ஈபிடிபிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடல் போக்குவரத்துக்களை முற்றாக இடைநிறுத்தியிருக்கின்றனர். இதனால் நெடுந்தீவில் இருந்து ஏனைய தீவுகளுக்கான கடற்போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டிருக்கின்றதாகவும். கச்சதீவில் இருந்து நெடுந்தீவின் ஊடாகப் பயணம் செய்த பக்தர்கள் நெடுந்தீவில் இருந்து போக்குவரத்தினை மேற்கொள்ளமுடியாது நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.