பக்கங்கள்

26 பிப்ரவரி 2012

தமிழினத்தின் போராட்டத்தை முறியடிக்க போராடும் டக்ளஸ்!

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா தனது இனத்தின் அழிப்பை சிங்கள அமைச்சர்களுடன் சேர்ந்து நியாயப்படுத்தும் நடவடிக்கையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி, சமாதானம், அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் டக்ளஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கு டக்ளஸ் படாதபாடு படுவதை படங்களில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.