பக்கங்கள்

18 பிப்ரவரி 2012

மறந்து போகுமோ ஊரின் நினைவுகள்?சுப்பர் சிங்கரில் பிஞ்சு உள்ளத்தின் கண்ணீர் பாடல்!

எப்படி மறக்கும் ஊர் நினைவுகள்?கனடாவில் இருந்து சென்று விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பிஞ்சு உள்ளத்தின் பாடல்,இல்லை இல்லை உள்ளக்குமுறல் என்றே சொல்லலாம் அந்த உள்ளக்குமுறல் கட்டாயம் கரையாத நெஞ்சங்களையும் கலங்கடிக்கும் என்பது உண்மை!புலம்பெயர் தேசங்களிலே வாழும் ஒவ்வொரு மனங்களும் நாம் எப்போது எம் மண்ணில் சுதந்திரமாக காலடி வைப்போம் என்ற ஏக்கத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறன.அடுத்தவனின் கெடுபிடியின்றி எம் நிலத்தில் நாம் வாழவேண்டும்.ஆயுத கலாச்சாரமற்ற ஓர் பூஞ்சோலையாக எம் ஊரை நாம் காணவேண்டும்.அதற்கு நாம் ஜனநாயக ரீதியில் போராடவேண்டும்.இந்த குழந்தை போல் எத்தனையோ குழந்தைகள் தமது ஏக்கத்தை மனதுள் புதைத்து வைத்திருப்பார்கள் என்பதை என்னும்போது நெஞ்சமே வெடித்துவிடும் போலுள்ளது.இதோ அந்தக் குழந்தையின் ஏக்கத்தை நீங்களும் காணுங்கள்,கேளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.