பக்கங்கள்

15 பிப்ரவரி 2012

தமிழினிக்கு தொடரும் விளக்கமறியல் உத்தரவு.

சட்டமா அதிபரின் ஆலோசனைக் கிடைக்காததால் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் மகளிர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுப்ரமணியம் சிவகாமி என அழைக்கப்படும் தமிழினி நேற்றையதினம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.
தமிழினி தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் முழு ஆவணமும் சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டனர். எனினும் சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட மா அதிபர் இன்னும் ஆலோசனை வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி தமிழினியை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.