பக்கங்கள்

08 பிப்ரவரி 2012

திருநெல்வேலி சந்தைக்கான புதிய கட்டிடத்தை சேனாதிராஜாவும் தேவானந்தாவும் திறந்து வைத்தனர்!

திருநெல்வேலி சந்தைக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடக்கின் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் மாவை சேனாதிராஜாவும் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் குதூகலமாகத் திறந்து வைத்தனர்.
திருநெல்வேலி சந்தைப் பகுதியில் 80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மிக நெருக்கமாக சிரித்து கதைத்துக் கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்களிற்கு பெரிதும் ஆச்சரியத்தைக் கொடுத்ததாக அதில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளரிடம் தெரிவித்ததோடு - சம்பந்தன் சந்திரகாந்தன் சேர்ந்தால் கிழக்கில் குற்றம்!-மாவை டக்ளஸ் சோந்தால் வடக்கில் சுத்தம்! இது என்ன அரசியலப்பா என அலுத்துக்கொண்டாராம்.
எது என்னவோ இந்த ஒற்றுமையை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கூட்டமைப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பரஸ்பரம் தொடர்ந்து கடைப்பிடித்தால் தமிழருக்கு யாரு பகைவர்! நிம்மதி பிறக்கும்.
இந்த ஒற்றுமை தமிழர் நலன் சார்ந்ததாக இருந்தால் அதை நிச்சயம் தமிழ் மக்கள் வரவேற்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.