பக்கங்கள்

22 பிப்ரவரி 2012

மேலதிக பாதுகாப்பு கோருகிறது ஐ.நாவுக்கான இலங்கை தூதரகம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் ஜெனீவாவிலுள்ள தூதரக அதிகாரிகள் இந்த வேண்டுதலை விடுத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தமிழர்கள் செல்லவுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு குழு மார்ச் 7 ஆம் திகதி பெல்ஜியத்திலிருந்து ஜெனீவாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். நிலமை மோசமடையலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை மாநாடு நடக்கும் ஏக காலத்தில் அதற்கு முன்னர் பெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்த பல தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இருந்த போதும், தமக்கே ஐ.நாவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தமிழ் அமைப்பு ஏகபோக உரிமை கொண்டாடி, செய்திகளை வெளியிட்டுள்ளமை மிகவும் சிறுபிள்ளைத்தனமான இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து இயங்கவேண்டிய இந்த தருணத்தில் குறிப்பிட்ட ஒரு அமைப்பின் அறிக்கையானது தமிழர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.