பக்கங்கள்

07 பிப்ரவரி 2012

விமல் வீரவன்சவின் மனைவியை காட்டுக்குள் இருந்து மீட்டது பொலிஸ்!

அடர்ந்த காட்டுக்குள் தொலைந்து போன சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி - 24 மணிநெரம் கழித்து கடும் தேடுதலின் பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யால தேசிய வனவிலங்குகள் சரணாலயத்தின் மிகவும் ஆழமான பகுதியில் அமைந்துள்ள கெபிலித்த ஆலயத்துக்கு சசி வீரவன்ச ஒரு குழுவினருடன் சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் மூன்று வாகனங்களில் சென்ற அவர்கள் நடுக்காட்டுக்குள் சகதிக்குள் சிக்கிக் கொண்டன.
இதனால் சசி வீரவன்ச உள்ளிட்டோரால் காட்டுக்குள் இருந்து வெளியேற வழி தெரியாமல் திணறினர்.
ஒரு நாள் முழுவதும் அவர்கள் காட்டுக்குள் தவித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்றுக்காலை மூன்று காவல்துறைக் குழுக்கள் தேடுதலில் இறக்கி விடப்பட்டன.
இதையடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்டு வரப்பட்டதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.