பக்கங்கள்

04 பிப்ரவரி 2012

ஸ்ரீலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் இலக்குகளை எட்டுவதற்கான கருவியாக பயன்படும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரான டேவிட் கென்னடி நெதர்லாந்து வானொலிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது சிறிலங்காவில் எல்லாச் சமூகங்களையும் நல்லிணக்கத்தை நோக்கி நகர ஊக்குவிக்கும்.
இது முக்கியமானதொரு மனிதஉரிமைகள் பிரச்சினை. இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.