பக்கங்கள்

28 பிப்ரவரி 2012

இலங்கைக்கு எதிரான செயற்பாட்டில் அரசசார்பற்ற நிறுவனங்கள் முனைப்பு.

இலங்கைக்கு எதிராக அரச சார்பற்ற அமைப்புகள் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட 37 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜெனீவாவிற்கு சென்றுள்ளன.
இதற்கு மேலதிகமாக தென் ஆபிரிக்காவின் முன்னாள் பேராயர் டெஸ்மன் டுட்டு மற்றும் அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சட்டங்களை அமுல்படுத்துமாறு அரச சார்பற்ற அமைப்புகள், பேரவை அமர்வுகளில் கோரிக்கை விடுக்கவுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டாம் என இலங்கைப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளேக் உள்ளிட்ட தரப்பினர் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.