பக்கங்கள்

24 பிப்ரவரி 2012

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை!

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெனிவாவில் மார்ச் 27ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை வலுப்படுத்த அமெரிக்காவுடன் மேலும் பல நாடுகள் இணைந்துள்ளன.
இலங்கை 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக ஐக்கியநாடுகள் சபை குற்றஞ்சுமத்தியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அறிக்கை சமர்ப்பித்தது.
எனினும் அதனை உலக நாடுகள் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. அவ் அறிக்கையில் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லை என இலங்கை மீது தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர உள்ளதாக அமெரிக்கா அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.