பக்கங்கள்

16 பிப்ரவரி 2012

மரியாதை போச்சே"பீரிசுக்கு வந்த ஞானம்.

சிறிலங்கா அதிபரால் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளால் அனைத்துலக சமூகத்தில் தான் மரியாதையை இழந்து விட்டதாக புலம்பியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நடந்த இராப்போசன விருந்தில் தனது நெருக்கமான நண்பர்களிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விருந்தில், சிறிலங்காவின் தற்போதைய நிலவரம் தொடர்பாக நீண்டநேரம் பேசிய பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுடனான தனது சந்திப்பில் என்ன நடக்கக் கூடும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தவறியது ஏன் என்ற ஹிலாரியின் கேள்விக்கு பதிலளிப்பதில் தான் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த முறை அமெரிக்கா சென்று ஹிலாரியை சந்தித்தபோது, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்று உறுதியளித்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் வழிகாட்டலை நம்பி அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதாக தாம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குறைபட்டுள்ளார். தனது அமைச்சின் விவகாரங்களில் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, பசில் ராஜபக்ச ஆகியோர் தலையிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இப்போது உணவகம் போலாகி விட்டதாகவும் புலம்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.