பக்கங்கள்

09 பிப்ரவரி 2012

தமிழர் வீட்டில் கொள்ளையிட சென்ற தமிழன் பொலிசில் சரண்!

இத்தாலி நாபோலியில் உள்ள நடராஜா வசந்தகுமார் என்பவருடைய
வீட்டில் கொள்ளையிடச் சென்ற திருடன் பொலிசில் சரணடைந்தான்.
இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது.
கடந்த முதலாம் திகதி காலை 9.30மணி அளவில் வசந்தகுமார் குடும்பத்திற்கு
நன்கு பரிச்சயமான(தமிழர்)ஒருவர் அவர்கள் வீட்டிற்கு சென்று,கதைவை
திறக்குமாறும் அவர்களுக்கு கொடுக்க சீடி ஒன்று கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து திருமதி வசந்தகுமார் கதவை திறந்துள்ளார்.
கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த நபர் திடீரென கத்தியை எடுத்து
நகைகளை கழட்டுமாறு மிரட்டியுள்ளார்.இதையடுத்து நடந்த இழுபறியில்
கத்தி முறிந்ததுடன் பெண்ணின் கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது,அப்பெண்ணின்
தலையை பிடித்து சுவரில் அடித்ததால் தலையிலும் காயம் ஏற்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.இனியும் நின்றால் ஆபத்தென உணர்ந்த அந்நபர் இந்த விஷயத்தை
வெளியே சொன்னால் எல்லோரையும் கொன்று விடுவேன் என எச்சரித்து விட்டு தப்பித்திருக்கிறார்.
அதன் பின்னர் இவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
விரைந்து வந்த பொலிசார் அவரை தமது வாகனத்திலேயே ஏற்றி சென்று
மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.இதை அறிந்து கொண்ட அப்பகுதி
தமிழ் மக்கள் அந்தக் கொள்ளையனை தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
தான் தேடப்படுவதை அறிந்து கொண்ட அக்கொள்ளையன் தானாகவே
சென்று சரணடைந்துள்ளதாகவும்,பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நபர் பிரபல இசைக்கலைஞர் எனவும்,வேலையற்று இருக்கும்
இவர் இப்படியான சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.