பக்கங்கள்

24 பிப்ரவரி 2012

சவேந்திர சில்வா மீதான தடை சரியானதே.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்புக்கான பான் கீ மூனின் ஆலோசனைக்குழுவில் இருந்து இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா தடைசெய்யப்பட்டமை சரியான தீர்மானம் என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் எனினும் ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர், Herve Ladsous இது தொடர்பில் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை ஆலோசனைக்குழுவின் தீர்மானம் மற்றும் சவேந்திர சில்வாவின் நிலைப்பாடு ஆகியவை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர், ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும் அவர் அதற்கு பதில் எதனையும் வழங்கவில்லை. எனினும் ஷவேந்திர சில்வா ஆலோசனைக்குழுவில் இருந்து தடைசெய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் கவனம் செலுத்தியுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சவேந்திர சில்வாவின் விடயம் இன்னும் உறுப்பு நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதேவேளை மாலை நேர செய்தியாளர் சந்திப்புக்காக வந்திருந்த ஐக்கிய நாடுகளின் பாலியல் வன்முறை தொடர்பான நிபுணர் மார்கட் லோஸ்ரோமிடம், ஷவேந்திர சில்வா நீக்கம் தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
இதன்போது, பதிலளித்த வோல்ஸ்ரோம், சவேந்திர சில்வா குறித்த ஆலோசனைக்குழுவில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.இது சரியான தீர்மானமாகவே இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.