பக்கங்கள்

27 பிப்ரவரி 2012

வன்னியிலும் யாழிலும் தோல்வியில் முடிந்த ஆர்ப்பாட்டம்.

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அச்சுறுத்திய இராணுவத்தினர் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு முல்லைத்தீவு நகரிலும், புதுக்குடியிருப்பிலும் இராணுவத்தினர் வீடுவீடாக சென்று அழைப்பு விடுத்த போதிலும் புதுக்குடியிருப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
நேற்று முழுவதும் ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள், உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நிவாரணங்கள், சலுகைகள் வழங்கப்படும் என இராணுவத்தினர் கூறிய போதிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சி பெற்று விடுதலையான 60 இளைஞர்களையும் வாகனங்களில் ஏற்றிச்சென்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இன்று ஈபிடிபியும் அங்கஜனும் இரு வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். யாழ் கோவில் வீதியிலிருந்து அங்கஜனால் ஆரம்மிக்கப்பட்ட பேரணியும் யாழ் முனியப்பர் கோவிலிலிருந்து ஈபிடிபியால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியிம் வேம்படிச் சந்தியில் சந்தித்து யாழ் பஸ்நிலையத்தை சென்றடைந்தது.
இதில் போர்க்குற்றவாளி சந்திரசிறியும் பங்குபற்றியிருந்தார். இதில் நூற்றிக்கும் குறைவான பொதுமக்களே பங்கு பற்றியிருந்தனர்.யாழ் கோவில் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அங்கஜன் குழு ஒரு மகஜரை கையளித்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.