பக்கங்கள்

04 பிப்ரவரி 2012

இலங்கையில் அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகம்!

கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் 2,588 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2011 ம் ஆண்டில் 1,503 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், 1,085 ஏனைய வன்முறைகளும் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் முன்னைய ஆண்டுகளைக் காட்டிலும் 2011ம் ஆண்டிலேயே அதிகளவிலான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவானதாகவும், இவ்வாறான சம்பவங்களில் 22 சிறுவர்கள் பலியாகியள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த வருடத்தில் ஓரின இரத்த உறவுடையோரால் அல்லது உறவினர்களால் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக 9 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கடந்த ஆண்டில் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக 54 சம்பவங்களும், சிறுவர் படுகொலை செய்யப்பட்ட 10 சம்பவங்களும், சிறுவர்கள் மீதான 247 கொடூர தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.