பக்கங்கள்

25 நவம்பர் 2011

யாழ்ப்பாணத்தில் இப்படியொரு ஆட்டோக்காரன்!

தனது ஓட்டோவில் இருந்து பெண்ணைக் கீழே தள்ளி விட்டு, அவரின் உடைமைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
திருகோணமலையில் இருந்து யாழ். பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளை வந்திறங்கிய பெண் ஒருவரை ஆனைக்கோட்டைக்கு ஏற்றிச் சென்ற ஓட்டோச் சாரதி ஒருவர் அந்தப் பெண்ணைக் காக்கைதீவு வெளியில் தள்ளிவிழுத்தி விட்டு அவரின் கைத்தொலைபேசி, பணம் அடங்கிய கைப்பை, உடுப்புப் பை போன்றவற்றுடன் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாகக் குறித்த பெண் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
திரியாய், திருகோணமலையைச் சேர்ந்த மகாதேவ ஐயர் அமுதச் செல்வி (வயது45) என்பவர் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையிலிருந்து இரவு நேரப் பயணம் மேற்கொண்டு, அதிகாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
அங்கு நின்ற ஓட்டோ சாரதி, இவர் போகும் இடத்தை விசாரித்து, தானும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும், மரணம் அடைந்தவரின் பெயர் விவரங்களைக் கூறியுள்ளார். இதனை நம்பி, அப்பெண் அவரது ஓட்டோவில் பிரயாணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஓட்டுமடம் வீதியால், ஆறுகால்மடம் வரை வந்த ஓட்டோ காக்கைதீவு நோக்கி கல்லுண் டாய் வழியாக ஓட் டோவைச் செலுத்திய சாரதி, இடைவெளியில் நிறுத்திவிட்டு பெற்றோல் இல்லை எனக் கூறி,குறித்த பெண்ணை ஓட்டோவைத் தள்ளுமாறு கேட்க பெண்ணும் ஓட்டோவைத் தள்ளி விட்டு, ஏற முற்பட்ட போது அவரைத் தள்ளி விழுத்தி விட்டு ஓட்டோவில் இருந்த பெண்ணின் கைத்தொலை பேசி, உடுப்புப்பை, 1600 ரூபா அடங்கிய கைப்பை ஆகியவற்றுடன் அவர் ஓடித் தப்பியுள்ளார்.
இதுபற்றி ஓட்டோ சங்கத்திடம் பெண் முறையிட்ட போது, பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டாம். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.