பக்கங்கள்

08 நவம்பர் 2011

முல்லைத்தீவில் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது சிங்களப்படை!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் முறைப்பாடு தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பு துர்க்கா வீதிச்சந்தியில் வணிக நிலையம் ஒன்றினுள் நுழைந்த இராணுவத்தினர் அங்கு படுத்திருந்த கடை உரிமையாளர் அவரது மகன், பஸ் சாரதி என மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதேவேளை அன்று முற்பகல் 10 மணியளவில் கோம்பாவில் பகுதியில் வணிக நிலையம் ஒன்றை நடத்திவரும் காலிழந்த ஒருவரைத் தாக்குவதற்கும் இராணுவத்தினர் முயன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது உடனிருந்த கடை உரிமையாளரின் மனைவி மீது கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் இராணுவ த்தினர் மேற்கொண்டனர் என்று கூறப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இராணுவத்தினர் இவ்வாறு பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரின் இந்தத் திடீர் மாற்றத்துக்கான உண்மைக் காரணத்தை அறிந்து கொள்ள முடியாதுள்ளதால் இங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.