பக்கங்கள்

30 நவம்பர் 2011

காணாமல் போன மாணவன் விடுதி திரும்பினார்.

நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை மாணவன் வேதாரணியம் லத்திஸ் நேற்றுத் திங்கட்கிழமை மாலை விடுதிக்குத் திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த மாணவனுக்கு எந்தவிதமான பிரச்சனையும் தற்போது இல்லை என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த மாணவனுக்கு என்ன நடந்தது என்பதை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு தெரிவிக்க தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 27ம் திகதி மாவீரர் தினத்தன்று இரவு குறித்த மாணவன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழக மாணவன் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களினால் கடத்தப்பட்டு வவுனியா நகரப்பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு சரளமாக தமிழில் உரையாடிய மூவரினால் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்.
இவர் முன்னாள் புலி இயக்கப் போராளி என்பதால் இவரிடம் யாழ்.பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் முன்னாள் போராளிகளின் விபரங்களையும் தருமாறும் மாவீரர் தினம் கொண்டாடுமாறு யார் உங்களுக்குப் பின்னால் நின்று செயற்படுகிறார்கள், எந்த அரசியல் வாதியின் பின்னனியோடு இதைச் செய்தீர்கள் என்ற பல கோணங்களில் விசாரிக்கப்பட்டதாக தெரியவருகிறது
யாழ்.சாவச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவன் விசாரிக்கப்பட்டதன் பின்னர் தற்போது வீடு வந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதே வேளை இந்த மாணவனின் பெற்றோர் மிகவும் பயப் பீதியுடன் இருப்பதாகவும் இந்த மாணவன் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவராக இருப்பதாக அவரைச் சென்று பார்வையிட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.