பக்கங்கள்

23 நவம்பர் 2011

அங்க சேஷ்டை புரிந்தவரை இழுத்துச்சென்று போலீசில் ஒப்படைத்த யாழ்ப்பாணப்பெண்!

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு அங்க சேட்டை விட்ட இளைஞன் ஒருவரை யாழ். பொலிஸ் நிலையம் வரை இழுத்துச் சென்றுள்ளார் துணிரகமான பெண்.இச்சம்பவமானது இன்று புதன்கிழமை 23ம் திகதி காலை 7 மணியளவில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த பெண்ணுடன் தொடர்ச்சியாக அங்க சேட்டை விட்டுக் கொண்டிருந்த இளைஞனை வீதியில் வைத்து சேட்டைப்பிடித்து தர தர என இழுத்துச் சென்றதை வீதியில் நின்றவர்கள் விசாரித்த போது அந்தப் பொண்ணுக்கு அங்க சேட்டை விட்டுள்ளார் எனத் தெரியவந்தது.
இதனை அடுத்து அங்கு கூடிநின்றவர்களும் இந்தப் பெண்ணுமாக சேர்ந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞனை ஓப்படைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.