பக்கங்கள்

11 நவம்பர் 2011

பாடசாலை அதிபர் கந்தர்மடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து வெட்டிப்படுகொலை!

யாழ்.தென்மராட்சி வரணி கரம்பக்குறிச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் சிவசுப்ரமணியம் தயாபரன் (வயது 40) கடந்த இரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மீசாலைப் பகுதியில் வசித்துவருகின்ற பாடசாலை அதிபர் தயாபரனுக்குச் சொந்தமான வீடு ஒன்று புகையிரதநிலைய வீதி, கந்தர்மடத்திலும் உள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட அவரது வீட்டின் கீழ் தளத்தில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் தற்காலிகமாக குடியமர்ந்துள்னளர்.
நேற்றும் வழமைபோல தனது வீட்டினைப் பார்க்கச் சென்ற அதிபர் தயாபரன் மேல்மாடியில் தங்கியிருக்கின்றார். இறுதியாக 9.00மணியளவில் அவர் தனது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவருடைய தொடர்பு கிடைக்காத நிலையில் வீட்டினர் மீசாலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று பார்த்த போது அவர் கத்திவெட்டிற்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை கீழ் தளத்தில் இருந்த சிங்களமாணவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என்று தெரிவித்திருக்கின்றனர். தாம் தமது பெருநாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு காலம் தாழ்ந்தே வீடு திரும்பியதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அதே வீட்டில் முன்னரும் கண்டியைச் சேர்ந்த மாணவர்களே தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.