பக்கங்கள்

26 நவம்பர் 2011

சிங்களப் பெண்களினால் யாழில் விபத்துக்கள் அதிகரிப்பு என இமெல்டா தெரிவிப்பு.

தென்பகுதியிலிருந்து யாழ்ப்பணம் வரும் சுற்றுலாப் பயணிகளில் சிங்கள இளம் பெண்கள் அணியும் குட்டை ஆடையைப் பார்க்கும் யாழ்.இளைஞர்கள் மெய்மறந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவதனால் யாழ். நவீன சந்தைப்பகுதியில் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறதாக கூறுகிறார் யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார்.
பெண்களின் உரிமை தினமாக இன்று அவரிடம் யாழில் இளையோரின் நிலை தொடர்பாக கருத்துக் கேட்டபோது இவ்விதம் சிரித்தவாறு பதில் அளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழிற்கு வரும் தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தமிழ் பண்பாட்டைச் சீரழிக்கும் விதத்தில் நடந்து கொள்வதாகவும் நடுவீதியில் ஜோடியாக அழைந்து திரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு யாழுக்கு சுற்றுலா வரும் பெரும்பான்மை இனத்தவர்களில் சிலர் குறிப்பாக சிங்கள இளம் பெண்கள் குட்டை ஆடையோடு அலைந்து திரிவதால் எமது இளைஞர்களும் பால் உணர்வுக்குத் தூண்டப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எமது பண்பாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் அடுத்தவர்களின் பண்பாட்டை மதிக்கவேண்டும் எனக் கூறியதோடு எமது சமூகக் கலாச்சரப் பிறழ்வு நிலைக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளும் ஒருவிதத்தில் காரணிகளாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.