பக்கங்கள்

12 நவம்பர் 2011

அலுக்கோசுகளாக பெண்களும் விண்ணப்பிக்கலாமாம்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவர்களுக்கான (அலுகோசு) இரு பதவிகளுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என சிறைசாலைகள் திணைக்களம் நேற்று தெரிவித்தது.
பெண்களுக்கு சட்டப்படி உரிமையுள்ளதால் பெண்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர் என சிறைசாலை அதிகாரியொருவர் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில நாளிதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். ‘இப்பதவிக்கான பிரதான தகுதி உள, உடல் திடநிலையே. ஏனைய தேவைகள் இரண்டாம் பட்சமே’ என அவர் கூறினார்.
முன்னர் இப்பதவிகளை வகித்தவர்கள் 8ஆம் வகுப்புவரை மாத்திரமே கல்வி கற்றவர்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் 13,000 ரூபா சம்பளம் வழங்கப்பட்டது என அவ்வதிகாரி கூறினார்.
இப்பதவி வெற்றிடம் இன்னும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஏற்கெனவே நூற்றுக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் ஆனால் பொருத்தமான நடைமுறைகள் பின்பற்றப்படாததால் பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் இவ்வெற்றிடங்கள் தொடர்பான விளம்பரம் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.