பக்கங்கள்

21 நவம்பர் 2011

வரணியில் சுற்றுமதில் விழுந்து மாணவன் பலி!

யாழில். பாடசாலையொன்றின் சுற்றுமதில் இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் யாழ்.வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் ஜெகநாதன் செந்தூரன் (வயது 7) என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மேற்படி மாணவரின் சடலம் சாவகச்சேரி ஆராத வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.