பக்கங்கள்

20 நவம்பர் 2011

மொகான் பீரிஷின் கருத்துக்கு திஸ்ஸநாயகம் மறுப்பு.

தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டமை காரணமாகவே தமக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னி;ப்பு வழங்கப்பட்டது என்ற கூற்றை சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம் மறுத்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் கேள்விகளுக்கு கடந்த நவம்பர் 9 ஆம் திகதி பதிலளித்த இலங்கை அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ், திஸ்ஸநாயகம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாகவே அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
அவருடைய வழக்கில் ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் தமக்கு இது தெரியும் என்றும் மொஹான் பீரிஸ் குறிப்பிட்டிருந்தார். எனினும் மொஹான் பீரிஸின் கூற்றை மறுத்துள்ள திஸ்ஸநாயகம் தனிப்பட்ட காரணங்களுக்காக எவருக்கும் பொதுமன்னிப்பை கோரமுடியும்.
ஆனால் இலங்கை அரசாங்கம் தம்மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு மன்னிப்பை கோரியதாக தெரிவிக்கப்பட்ட தகவல் பிழையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தாம் எவ்வித குற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் திஸ்ஸநாயகம் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் முறுகல்களை தோற்றுவிக்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தி திஸ்ஸநாயகம் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குற்றவாளியாக இனங்காணப்பட்டு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டார்.
எனினும் பின்னர் உலக நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கொடுத்த அழுத்தத்தினால் மகிந்தவினால் பொதுமன்னிப்பு என்ற பெயரில் அவர் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.