பக்கங்கள்

18 நவம்பர் 2011

மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் மரணம்!

நேற்றையதினம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் பேருந்து ஒன்றுடன் சொகுசு ஊர்தி ஒன்று மோதிக்கொண்டதில்பெண்ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தும் யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு ஊர்தியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் 52 அகவையுடைய தேவகுஞ்சரி பரஞ்சோதி என்ற பெண் உயிரிளந்ததுடன் அவரது கனவரான 60 அகவையுடைய செல்லமுத்து பரஞ்சோதி மற்றும் 33 அகவையுடைய ஆர்.சுதர்சன் 22அகவையுடைய எஸ்.தவசீலன் என்பவர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.