பக்கங்கள்

17 நவம்பர் 2011

அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.

இலங்கையை சேர்ந்த 26 வயதான தயாரட்ன ஜயசேகர எனும் இளைஞரொருவர் அவுஸ்ரேலியாவின் சிட்னியிலுள்ள விலாவூட் குடிவரவு தடுப்பு முகாமில் ஒக்டோபர் 26ஆம் திகதி தற்கொலை செய்துள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நேற்று புதன்கிழமை கான்பராவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகாராலயத்திற்கு அறிவித்துள்ளது.
இதுவரை அவரின் அடையாளம் காட்ட யாரும் முன்வரவில்லை. அத்துடன் இவர் தொடர்பிலான விபரங்களும் தெரியவில்லை.
குறித்த நபர் தான் தமிழர் என கூறிக்கொண்டு சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைந்து அகதி விசா கோரியவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தொடர்பான தகவல் அல்லது ஜயசேகரவின் குடும்பத்தவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவுடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளும்படி கோரப்பட்டுள்ளனர்.
இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்:

கொன்சியூலர் பிரிவு,
வெளிவிவகார அமைச்சு,
இல.14, சேர் பாரன் ஜயதிலக்க மாவத்த,
கொழும்பு – 01.

தொலைபேசி : 011 2437635 / 011 4718972
தொலைநகல் : 011 2473899
மின்னஞ்சல் : consular@sltnet.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.