பக்கங்கள்

30 நவம்பர் 2011

கரைச்சி பிரதேச சபையின் களஞ்சியத்தை உடைத்து திருடினர் சுதந்திரக் கட்சியினர்!

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நீலப்படையணியினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேச சபையின் களஞ்சிய அறை தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ளது. “நேற்று மதியம் களஞ்சிய அறைக்கு வந்த சிலர் பூட்டுக்களை உடைத்து அங்கிருந்த பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
விசாரித்ததில் அவர்கள் கிளிநொச்சி சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிந்தது. அதனால் தான் அவர்களுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்” என்று கூறினார் பிரதேச சபைத் தலைவர் நா.வை.குகராஜா.
487928 இலக்கமுடைய “எல்வ்’ ரக வாகனத்தில் வந்தவர்களாலேயே பொருள்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தமது முறைப்பாட்டைப் பதிவதற்கு முதலில் மறுத்தார்கள் என்றும் சுதந்திரக் கட்சியினருடன் பேசி சமாதானமாகச் செல்லுமாறு கூறினார்கள் என்றும் பிரதேச சபையினர் தெரிவித்தனர்.
சுதந்திரக் கட்சி அலுவலகத்துக்குச் சென்று பிரதேச சபை ஊழியர்கள் கேட்டதற்கு “தனியார் காணியில் இருந்ததால் தாங்கள் பொருள்களை எடுத்து வந்தனர்” என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
சம்பவம் குறித்து சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலியுடன் தொடர்புகொண்டு கேட்ட போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் இந்தச் சம்பவத்தில் தொடர்புபடவில்லை என்று கூறினார். நீலப்படையணியினர் ஏதாவது செய்தார்களா? என்பது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.